தூத்துக்குடி: விசைப்படகு மீனவர்கள் 14-வது நாளாக வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 14வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தை தொடங்கிய தூத்துக்குடி மீனவர்கள், தற்போது வரை மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதோடு, பலகோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

varient
Night
Day