தூத்துக்குடி: வெள்ளத்தால் சேதமான சாலை - ஒரு மாதத்திற்கு மேலாகியும் சீரமைக்கப்படாத அவலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலை ஒரு மாதத்திற்கு மேலாகியும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த மாதம் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அந்தோணியார்புரம் கிராமத்தில் உள்ள தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இப்பகுதியில் தற்காலிக சாலை போடப்பட்ட நிலையில், அதன் அருகே சுமார் 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக எந்தவித விளக்கும் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சத்துடன் பயணிகள் வாகன ஓட்டிகள், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day