தூத்துக்குடி: ஹிந்தி தெரிந்த ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்ததால் பயணிகள் சிரமம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தி தெரிந்த ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இன்று ஹிந்தி தெரிந்த ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் விவரங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் ஆத்திரமடைந்து அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரயில்வே நிலைய மேலாளரிடம் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். 

Night
Day