தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகே மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்த அமராவதி என்பவரின் கணவர் குணாவுக்கு வேலை இல்லாத நிலையில், அமராவதி மகளிர் குழுவில் இணைந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். மகளிர் குழுவில் அமராவதி இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்வதை குணா கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமராவதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் கலந்து கொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, குணா அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அமராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய குணாவை தேடி வருகின்றனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...