தென்காசிக்‍கு வரும் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டத்தில், "அம்மாவின் வழியில் மக்‍கள் பயணம்" மேற்கொள்ளவிருக்‍கும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

தமிழக மக்‍களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்‍களுக்‍கு தோலுரித்துக்‍ காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்‍ காத்திடவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி மாவட்டத்தில், வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை, "அம்மாவின் வழியில் மக்‍கள் பயணம்" மேற்கொள்கிறார். 

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வழக்கறிஞர் கிறைஸ்ட் மில்லர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒருங்கிணைந்த அஇஅதிமுக புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் உருவாக வேண்டும் என்றும் வரும் 17ஆம் தேதி தென்காசிக்கு வருகை தரும் புரட்சித்தாய் சின்னம்மாவை நாகர்கோவிலில் இருந்து திரளாக சென்று வரவேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Night
Day