தென்காசியில் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை, தென்காசியில் இன்று தொடங்கவிருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, இதற்காக சென்னையில் இருந்து தென்காசி சென்றடைந்தார். 

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும்,  திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணி காத்திடவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன் கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்றுமுதல் வரும் 20ம் தேதிவரை அம்மாவின் வழியில் மக்கள் பயணம் மேற்கொள்கிறார். 

இதற்காக, புரட்சித்தாய் சின்னம்மா, மாலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். திரளான கழகத் தொண்டர்கள் சின்னம்மாவை அன்போடு வழியனுப்பினார்கள். சென்னை புறநகர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சுந்தர்ராஜன், ராயபுரம் பெருமாள் உள்ளிட்டோர் சின்னம்மாவுக்கு ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம், சின்னம்மா மதுரை புறப்பட்டுச் சென்றார்.  

மதுரை விமான நிலையம் சென்றடைந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழகத்தினர் ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Night
Day