தென்காசி கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கேட்டு 500க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கூலி உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 15 கோடி ரூபாய் வரை துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day