தென்காசி தொகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடுஷோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தென்காசியில் வாகன பேரணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் முக்கிய தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தென்காசி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகன பேரணியில் ஈடுபட்டார். இதற்காக  ஹெலிகாப்டர் மூலம் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு வந்த அவர், கார் மூலம் தென்காசி வந்தார். அங்கு ரோடு ஷோவில் கலந்து கொண்ட அவர், பரப்புரையில் ஈடுபட்டார். தென்காசி பழைய பேருந்து நிலையம் வரை பரப்புரை மேற்கொண்ட அவர், ஜான் பாண்டியனின் வாக்குறுதிகள் குறித்தும் , மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் எடுத்துக்கூறியும் தேசிய தலைவர் ஜேபி நட்டா வாக்கு சேகரித்தார்.

Night
Day