தென்காசி: ஆட்சியர், எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தென்காசியில் நகைக்கடை, அச்சகங்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.சுரேஷ்குமார் உள்ளோர் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். விடுதிகள், திருமண மண்டபங்களில் வெளி நபர்கள் தங்குவது குறித்த தகவல்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பண பரிவர்த்தனை ஆகியவற்றிற்கு முறையான ஆவணங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்டன.

Night
Day