தென்காசி: குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை பதியமுடியாமல் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டத்தால், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்த மக்கள் கடும் அவதியடைந்தனர். திங்கட் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் இன்று தொடங்கியது. ஆனால், வருவாய் துறை ஊழியர்களின் போராட்டத்தால், மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்கள் இல்லை. மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், பின்னர் வந்த ஊழியர்கள், மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யாமல் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர். 

Night
Day