தென்காசி: தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு அதிநவீன சுழலும் கேமராக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தென்காசியில், தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு அதிநவீன சுழலும் கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, பறக்கும் படைகள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு, அவர்களுக்கான வாகனங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பண பட்டுவாடா உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவும் என தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day