தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மீண்டும் வைக்க கோரி பாஜக கவுன்சிலர்கள் முறையீடு செய்ததால், அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் இன்று நடைபெறும் கூட்டத்தில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை மீண்டும் கூட்டரங்கில் வைக்கக்கோரி முற்றுகையிடப் போவதாக பாஜக கவுன்சிலர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், அதிகாரிகள், முன்னதாகவே கூட்டம் நடைபெற்றதாகக் கூறி, கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகம் சென்றபோது, அவரது அறை பூட்டப்பட்டிருந்ததால் நகராட்சி பொறியாளரிடம் பிரதமர் மோடி படம் வைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவரும் அறையில் இருந்து வெளியேறியதால், பாஜக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...