தென்காசி: மருத்துவர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெரும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Night
Day