தென்காசி: மல்லிகை பூவின் வரத்து குறைவால் விலை கிடுகிடு உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பூக்களின் வரத்து குறைவால் மல்லிகை பூவின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை பன்மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்து அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், தற்போது 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

varient
Night
Day