தென்காசி: வாறுகால் அமைக்கும் பணியை தாமதப்படுத்தும் நகராட்சி நிர்வாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  வாறுகால் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தாமதப்படுத்துவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட எட்டாவது வார்டு பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரியின் தூண்டுதலின் பேரில் பணிகள் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆத்தரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையர் அறையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததன் காரணமாக கோபமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். 

Night
Day