தென்காசி: 21வது வார்டு பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீர் பிரச்சனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி நகரப் பகுதியில் நிலவி வந்த குடிநீர் பிரச்சனைக்‍கு ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலியால் தீர்வு கிடைத்துள்ளது. தென்காசி 21வது வார்டுக்‍கு உட்பட்ட சொர்ணபுரம் மேட்டு தெருவில் உள்ள 7 தெருக்களில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் வழங்காததால், அப்பகுதி மக்‍கள் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகம் அப்பகுதிக்‍கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்‍கள் தங்கள் வீடுகளில் கருப்புக்‍கொடி ஏற்றி காலிக்‍ குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்தி ஜெயா ப்ளஸ் தொலைக்‍காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து, சொர்ணபுரம் மேட்டு தெரு பகுதிக்‍கு குடிநீர் இணைப்பு வழங்க 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

varient
Night
Day