தேசிய கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது - உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றும் நிகழ்வை தடுக்க முன்னாள் நிர்வாகிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், குடியிருப்பு நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை, விசாரித்த நீதிபதி, தேசியக் கொடியேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்குவது அவமானம் என கூறினார். மேலும், தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார். போலீஸ் நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்தார்.

Night
Day