தேனி நரம்பியல் நோயால் கை, கால்கள் செயலிழந்து தவிக்‍கும் பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நரம்பியல் நோயால் பாதிக்‍கப்பட்ட பெண்ணுக்‍கு சிகிச்சை அளிக்‍க வசதி இல்லாததால், தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பாதிக்‍கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்‍கை விடுத்துள்ளனர். உப்புத்துறை கிராமத்தில் வசித்து வரும் வளர்மதி என்பவருக்‍கு, கடந்த 2 ஆண்டுகளுக்‍கு முன்பு முதுகு தண்டுவடம் பாதிக்‍கப்பட்டு கை, கால்கள் செயலிழந்து, வாய் பேசமுடியாமல் போனது. வீட்டை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் வளர்மதிக்‍கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் சரியாகாததால், அவருக்‍கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்‍க வசதி இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். எனவே, தனது மனைவிக்‍கு சிகிச்சை அளிக்‍க அரசு உதவி செய்ய முன்வரவேண்டும் என ராஜசேகரன் கோரிக்‍கை விடுத்துள்ளார்.

Night
Day