தேனி: அரசு பேருந்தின் உள்பகுதியில் இருந்து திடீரென கிளம்பிய புகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால், பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டி பகுதிக்கு பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. மேலபேட்டை தனியார் பள்ளி அருகே சென்ற போது, பேருந்தின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். திடீரென பேருந்தில் புகை கிளம்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

varient
Night
Day