தேனி: கழிவுநீர் வாய்க்காலில், படையெடுக்கும் பாம்புகளால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டியில், கழிவுநீர் வாய்க்காலில், பாம்புகள் படையெடுத்து இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் . அந்தப் பகுதியில், மூன்று நாட்களாக கழிவுநீர் வாய்க்காலில், பாம்புகள் படையெடுத்துள்ளன. தகவல் கொடுத்தும், தீயணைப்பு துறையினர் வரவில்லை என குற்றம்சாட்டும் மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர். ஒரே நாளில், குட்டிகள் உள்பட 30க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

varient
Night
Day