தமிழகம்
சென்னையில் ஆபரணத்தங்கம் ரூ. 55,000-ஐ தாண்டியது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அம்மாபட்டி கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிப்பட்டி அருகே அம்மாபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் செய்து தராதது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அம்மாபட்டி சித்தார்பட்டி சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...
ஒரே நாடு, ஒரே தேர்தல்! காலத்தின் கட்டயமா, அரசியல் சாசன மாற்றத்திற்காகவா?ஒர?...