தேனி: குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரப்படிதேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டி வைகை ஆற்றில் இருந்து ஆண்டிப்பட்டி பேரூராட்சியை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.ரெங்கநாதபுரம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக தரிசு நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Night
Day