தேனி: கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day