தேனி: தனியார் பள்ளிக்கு இணையாக நடைபெற்ற அரசு பள்ளி ஆண்டுவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் 99வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் சத்யஷீலா தலைமையில் நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம், கும்மி பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய ஆசிரியர்களை பாராட்டும் விதமாக முன்னாள் மாணவர்கள் பதக்கங்களை வழங்கி மகிழ்ந்தனர். 

Night
Day