தேனி: நூற்றுக்‍கணக்‍கான ஏக்‍கரில் பூத்துக்‍ குலுங்கும் செவ்வந்தி பூக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செவ்வந்தி பூ சாகுபடி செய்த நிலையில், தற்போது அவை செடிகளில் பூத்து குலுங்குகின்றன. பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான முதலக்கம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், நூற்றுக்‍கும் மேற்பட்ட ஏக்கரில்  செவ்வந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்‍கு தயாராக உள்ளன. மகா சிவராத்திரியையொட்டி, பூக்‍களுக்‍கு அதிக விலை கிடைக்‍கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் பூக்‍களை அறுவடை செய்து வருகின்றனர்.

Night
Day