தேனி: ரூ.50 பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 50 ரூபாய் தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணியை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆண்டிபட்டியில் இயங்கும் தாய் பாஸ்ட் புட் என்ற உணவகம் இன்று முதல் பிரியாணி விற்பனை செய்வதாக  அறிவித்தது. மேலும் 100 ரூபாய் பிரியாணியை, 50 ரூபாய்க்கு தள்ளுபடி விலையில் வழங்குவதாக நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை கண்ட பொதுமக்கள், கடைக்கு முன்பு அலைமோதிய நிலையில்,  இரண்டு மணி நேரம் தாமதமாக பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பிரியாணியை வாங்க முண்டியடித்துக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day