தேனி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - சூடு பிடித்துள்ள நுங்கு, பதநீர் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பனை நுங்கு மற்றும் பதநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெயிலிலிருந்து தப்பிக்க உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவு பொருட்களான பனை நுங்கு மற்றும் பதநீரை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பனைகளை எடுத்து வந்து வியாபாரிகள் நுங்கு மற்றும் பதநீரை ஆங்காங்கே விற்பனை செய்து வருகின்றனர்.

Night
Day