தேனி: வைக்கோல் ஏற்றி சென்ற வாகனம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கம்பம் குரங்கு மாயம் தெருவை சேர்ந்த ஓட்டுநர் முருகன், சுமை தூக்கும் தொழிலாளிகளான நல்லதம்பி, ரமேஷ் ஆகிய மூன்று பேர் வைக்கோல் கட்டுகளை வாகனத்தில் ஏற்றி கேரளாவில் விற்க கம்பம் மெட்டு மலைச்சாலையில் சென்றனர். பாரம் அதிகமாக இருந்ததால் பதினெட்டாவது கொண்டை ஊசி வளைவில் வாகனம் பின்னோக்கி சென்றது. இதனை தடுக்க நல்லதம்பி மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் டயருக்கு கல் வைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நல்லதம்பி மற்றும் ரமேஷ் மீது வாகனம் மோதி கவிழ்ந்தது. இதில் நல்லதம்பி பலியானதுடன் ரமேஷ் படுகாயம் அடைந்தார். 

Night
Day