தேர்தல் பறக்கும் படையினரின் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பறக்கும் படையினர் பயன்படுத்தும் வாகனங்களில் பெரும்பாலானவை திமுகவினரின் வாகனங்கள் என்பதால் அந்த வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக அமோக வெற்றிபெறும் என பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Night
Day