தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. செம்பரபாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், 250 கனடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, தற்போது 260 கன அடியாக உயர்ந்துள்ளது. fனமழை தொடர்வதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day