நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு - தத்தளித்த காசிமேடு மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் படகு நடுக்கடலில் மூழ்கிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த மனோகரன், தனது விசைப்படகில், தான் உள்ளிட்ட 6 பேருடன் மீன்பிடிக்கச் சென்றார். அவரது படகில் ஏற்பட்ட பழுதால், கடல்நீர் புகுந்த நிலையில், விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. அப்போது, அந்த வழியாக வந்த சக மீனவர்கள், மூழ்கிய படகில் இருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இதனிடையே, வயர்லெஸ் கருவி மூலம், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் காப்பாற்ற வரவில்லை என குற்றம்சாட்டினர். அதிகாரிகளின் அலட்சியத்தால், 20 லட்ச ரூபாய் படகு, கடலுக்குள் மூழ்கிவிட்டதாக வேதனை தெரிவித்த மீனவர்கள், முதல்வர் நிவாரணம் தர வேண்டும் என கோரினார். 

Night
Day