நடுக்கடலில் 11 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரையும், 1 படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து, ஒரு படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day