நடுவக்குறிச்சியில் தேவர் திருமகனார் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-


பாளையங்கோட்டை ஒன்றியம் நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேளதாளங்கள் முழங்க கலை நிகழ்ச்சிகளுடன் பொதுமக்கள், தொண்டர்கள், கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புரட்சித்தாய் சின்னம்மா வருகையையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நடுவக்குறிச்சி பகுதி திருவிழா கோலத்துடன் காட்சி அளித்தது.

வாணவேடிக்கையுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை தொண்டர்கள் வரவேற்றனர்.

நடுவக்குறிச்சியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொண்டர்கள் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.

சிறுவர், சிறுமிகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா சாக்லேட்கள் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, புரட்சித்தாய் சின்னம்மா, நடுவக்‍ குறிச்சியில் உள்ள பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.







Night
Day