எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாண்புமிகு அம்மாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் குழுவினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய ஆடுகள், வளர்ப்பு தொழிலுக்கான ஆட்டுக்குட்டிகளை வீடு தேடிச் சென்று பயனாளிகளிடம் நேரில் ஒப்படைக்கப்பட்டன. அதனை பெற்றுக் கொண்ட பயனாளிகள் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 77ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி உசிலம்பட்டி PMT கல்லூரி எதிரேயுள்ள திடலில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள், மாணவ மாணவிகள், மகளிர் குழுவினர், விவசாயிகள், மாற்றுதிறனாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் லேப்டாப், சைக்கிள், தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் இயந்திரம், எண்ணெய் செக்கு இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கரும்பு அரவை இயந்திரம், ஆடு கோழி வளர்ப்பு பெட்டகம், உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...
இதையடுத்து மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் புரட்சித்தாய் சின்னம்மாவிடமிருந்து நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகளுக்கு வீடு தேடி சென்று நலத்திட்ட உதவிப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி மற்றும் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த பயனாளிகள் இருவருக்கு தலா நான்கு வெள்ளாட்டு குட்டிகள்
ஒப்படைக்கப்பட்டன
அவ்வாறு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு தங்கள் குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் சின்னம்மா அவர்களுக்கு தொடர்ந்து தங்கள் குடும்பத்தினர் ஆதரவளித்து துணை நிற்போம் என்றும், தங்களைப் போன்ற ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேலும் வழங்க வேண்டும் என்றும், அடுத்து வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் சின்னம்மா கைகாட்டும் வழியில் செயல்படுவோம் என்றும் நன்றியுடன் கூறினர்.