நாகை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விழுந்தமாவடி பட்டிரோட்டை சேர்ந்த வீரராகவன் என்பவர், ஜெகன் என்பவருடன் புதுப்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். புதுப்பள்ளி பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீரராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த ஜெகன், மோகன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலேசியா புறப்பட தயாராக இருந்த இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். 

Night
Day