நாகை: கடந்த 15 நாட்களாக நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இழுவைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது குறித்த பிரச்சனை தொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் 15-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்ட கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வேதாரண்யம் மற்றும் கீழ்வேளுர் தாலுகா நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நாகை ஆட்சியர் ஆலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தீர்வு எட்டப்படாததால் தங்கள் போராட்டத்தை தொடர உள்ளதாக நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day