நாகை: கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டுமான பணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கிடப்பில் போடப்பட்டள்ள கழிவறை கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு  கழிவறைகள் இல்லாத வீடுகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கணக்கெடுத்து கழிவறைகள் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் செடி கொடிகள் மண்டி கிடப்பதுடன் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் வீணாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  கழிவறைகளை கட்டிக் கொடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day