நாகை: கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. ஆண்டுதோறும் சரணாலயத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை வேதாரண்யம் வனச்சரகர் அயூப்கான் தொடங்கி வைத்தார். இதில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், வனத்துறை ஊழியர்கள் என 50 பேர் ஈடுபட்டனர். கோடியக்கரை காட்டில் வசிக்கும் புள்ளிமான்கள், வெளிமான்கள் உள்ளிட்ட 16 வகையான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 30 சதுர கி.மீ. அளவில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் 12 பிரிவாக வழித்தடங்கள் பிரிக்கப்பட்டு வனத்துறை ஊழியர் வழிகாட்டியுடன் மாணவ, மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Night
Day