நாகை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களால் மீனவர்களை கொடூரமாக தாக்கினர். மேலும் அவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day