நாகை: நாட்டு படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இழுவை வலை பிரச்சனையால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள், ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து 16 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகை மற்றும் காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நாகை ஆட்சியர் தெரிவித்தார். இதனை 10 கிராம மீனவர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஆறுகாட்டுத்துறை மற்றும் கோடியக்கரை நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரின் உறுதிமொழியை ஏற்று 16 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர்.

Night
Day