நாகை: வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர மீனவர்கள் தீர்மானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இழுவை  வலை பயன்படுத்துவதை முறைப்படுத்தக் கோரி நடைபெற்றும் வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தீர்வு காணும் வரை தொடர்வது என மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாகை. காரைக்கால் பகுதி மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் வளம் முற்றிலும் அழியும் நிலை ஏற்படுவதாக கூறி வேதாரண்யம் மற்றும் கீழ் வேளூர் மீனவர்கள் கடந்த 26-ம் தேதி முதல் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Night
Day