நாகை: 10 கிராம மீனவர்கள் குடும்பத்தினருடன் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இழுவைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி நாகையில் நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை, காரைக்கால் மீனவர்கள் இழுவை வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வேதாரண்யம், கீழ்வேளுர் தாலுகா நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று வேளாங்கண்ணி ஆர்ச் அருகே பிரதான சாலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day