நாகை: 15 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காததால் ஆத்திரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் திருமருகல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருநாதபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 15 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

varient
Night
Day