நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்துபவர் பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு திட்டங்களை தேர்தலுக்காக இன்றி, நாட்டின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் புதிய மேம்பாலங்கள், சாலைகள் அமைக்கும் 8 திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஒளிபரப்ப பட்டது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தேர்தலுக்காக உழைப்பவர் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைப்பவர் என்றார்.

Night
Day