நாமக்கல்: அடிப்படை வசதிகள் இல்லாததால் அரசு குடியிருப்பை காலி செய்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு குடியிருப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். அணைப்பாளையம் பகுதியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் 208 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 30 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். 

Night
Day