நாமக்கல்: குடிநீர் பிரச்சனை - குடங்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே குடிநீர் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் குடங்களை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்மன் நகர், நாவிதர் காலனி, சலவையர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், குடங்களை உடைத்து போராட்டம் நடத்தினர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிடில் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.

Night
Day