நாமக்கல்: டாஸ்மாக்‍ பாரை அடித்து நொறுக்‍கிய மக்‍கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இரவு பகலாக மது விற்பனை செய்யும் டாஸ்மாக்‍ கடை பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

கொக்கராயன் பேட்டை அடுத்து உள்ள அம்மாச்சி பாளையத்தில் டாஸ்மாக்‍ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதித்த நேரத்தை விட 24 மணி நேரமும் அங்குள்ள பாரில் மது விற்பனை நடப்பதால் அங்குள்ள கூலித்தொழிலாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இது குறித்து ஊர்மக்கள் திரண்டு அரசு மதுபான பார் உரிமையாளரான திமுக நிர்வாகியிடம் சட்ட விரோத விற்பனையை தடுக்குமாறு பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மது விற்பனை செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று கூடி அதிரடியாக உள்ளே சென்று பாரை அடித்து நொறுக்கினர். கடையை அடித்து நொறுக்கும் சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெகுவாக பரவியது.

Night
Day