நாமக்கல்: பல்லி விழுந்த தேநீரை அருந்திய வடமாநில தொழிலாளர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே, திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில், பல்லி விழுந்த தேநீரை அருந்திய வடமாநில தொழிலாளர்கள் 10 பேருக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. ராசிபுரம் அருகே பழந்தின்னிப்பட்டி பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ்-க்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தேநீரில், பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அருந்திய வட மாநில தொழிலாளர்கள் 10 பேருக்கும், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக ஓ.சௌதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day