நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜராகினர். தடைச் செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. இதனையடுத்து, அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க என்.ஐ.ஏ. சம்மன் அளித்தது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன்,மதிவாணன், ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், இன்று, தென்னகம் விஷ்ணு, இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். 

Night
Day