நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதேபோல் காலை 5 மணி முதல் 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Night
Day